கண் தானம்
மனிதா ஓ மனிதா!
கனியான உன் கண்கள்,
மடிந்த பின் மண் சேரா,
மிளிர்ந்த உன் விழி மூடி ,
இருண்ட பிறர் விழி திறப்பாய்!
இறந்த பின்னும் இவ்வுலகில்,
இறவாது கண்டு வாழ்வாய்!
இருண்ட வீட்டில் கதிரவனாய்
இருளாமல் காத்து நிற்பாய்!
மண்ணில் மக்கும் விழிகளே...
விண்ணின் நிறத்தைக் காணச் செய்வீரோ ?
- அரவிந்த் பாரதி
Comments
Post a Comment